மே 3 அன்று மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை இன்று முறை வன்முறையாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை காணொளி ஒன்று வெளியாகி நாடு முழுவதையும் அதிர்ச்சியில்  ஆழ்த்தி  உள்ளது.

அந்த காணொளியில் குகி பழங்குடியின பெண்கள் இருவரை மைத்தெயி சமூகத்தை சேர்ந்தவர்கள் நிர்வாணமாக சாலையில் இழுத்துச் சென்றுள்ளனர். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகிய நிலையில் இந்த வீடியோவை சமூக ஊடகத் தளங்கள் வெளியிடவோ பகிரவோ வேண்டாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.