மக்களை கொள்ளை அடித்தவர்கள் எவ்வளவு அதிகாரம் மிக்கவர்களாக இருந்தாலும் அவர்களை தப்பிக்க விடமாட்டேன் என்று பிரதமர் மோடி காட்டமாக கூறியுள்ளார். இந்தியாவில் 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

நேற்று சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிலையில் அப்போது பேசிய அவர், நாட்டிலேயே முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக சத்தீஸ்கர் மாநிலத்தை உருவாக்க வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்தால்தான் இந்த மாநிலம் வளரும், ST, OBC மக்களின் நலன்களை பாதுகாப்பதே பாஜகவின் உறுதிபாடாகும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.