தற்போது தமிழகத்தில் கோடை வெயில்  வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வெயிலில் தாக்கத்திலிருந்து தப்பித்து கொள்வதற்காக பெரும்பாலான மக்கள்  பழங்களை சாப்பிடுகின்றனர். இதனை பயன்படுத்திக் கொள்ளும் வியாபாரிகள் வியாபாரத்தை அதிகப்படுத்த பழங்களில் ரசாயனம் கலப்பதாக புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில் வியாபாரிகள் ரசாயனம் கலந்த பழங்களை விற்பனை செய்வது தெரியவந்தால், புகாரளிக்கும் படி அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.

மாம்பழம், வாழை, தர்பூசணியில் ரசாயனம் கலந்து விற்கும் கொடூர குணமுள்ள வியாபாரிகள் உள்ளனர். அதுபோல ரசாயனம், வேதிப்பொருட்கள் கலந்த பழங்கள் விற்பனை செய்வது தெரியவந்தால், 94440 42322 என்ற வாட்ஸ் ஆப் எண் மூலம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கலாம் என்றார்.