மனதின் குரல் நிகழ்ச்சியில்  மக்கள் மத்தியில் உரையாற்றுவதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். அந்தவகையில் மாதந்தோறும் கடைசி ஞாயிறுதோறும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே மனதின் குரல்  என்ற நிகழ்ச்சியின் மூலமாக பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடுவார். இந்நிலையில்இதன் 100-வது அத்தியாயம் இன்று நடக்கிறது.

இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், ‘100-வது தொகுப்பை கேட்க தயாராக இருங்கள், உண்மையிலேயே சிறப்பான பயணமாக இருந்திருக்கிறது’ என குறிப்பிட்டுள்ளார். இதில் மோடி முக்கிய அறிவிப்பை வெளியிடலாம் என பாஜகவினர் காத்திருக்கின்றனர்.