பஞ்சாப் மாநிலம் லூதியானா கியாஸ்புரா பகுதியில் உள்ள தொழிற்சாலையில் கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. கேஸ் கசிவு காரணமாக மூச்சுத்திணறி 9 பேர் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டுள்ள 11 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.