ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது(EPFO) அதிக ஓய்வூதியம் பெற விரும்பும் ஊழியர்களுக்காக EPS திட்டத்தின் கீழ் அதிக ஓய்வூதியத்திற்குரிய விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கவேண்டிய கடைசி தேதி மே-3 என நிர்ணயித்துள்ளது. அதோடு ஊழியர் மற்றும் முதலாளியின் ஊதிய விபரங்களை சரிபார்க்கும் புது தகவலையும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பகிர்ந்துள்ளது.

ஏப்ரல் 23ம் தேதியன்று EPFO வெளியிட்டிருந்த உத்தரவில், அதிக ஓய்வூதியத்திற்குரிய விண்ணப்பங்கள் கள அலுவலகத்தால் சரிபார்க்கப்படும் எனவும் ​​தெரிவித்து உள்ளது. ஓய்வூதியத்திற்குரிய விண்ணப்பங்கள் அதிகரிப்பதற்கு எந்த காரணமும் வழங்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. EPFO ​​வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அதிக ஓய்வூதியத்தை பெறுவதற்கான செயல்முறை தன்னிச்சையானது இல்லை. மேலும் தகுதித் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உறுப்பினர் தான் பொறுப்பு எனவும் அறிவித்து இருக்கிறது.