தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (27.7..2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சென்னை: இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை எழும்பூர், தாம்பரம், ஐடி காரிடர், கே.கே. நகர், கிண்டி, போரூர், ஆவடி, அம்பத்தூர், மாதவரம், வியாசர்பாடி பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். எழும்பூர் பகுதியில் கீழ்ப்பாக்கம் போலீஸ் குடியிருப்பு, மருத்துவ கல்லூரி, பூந்தமல்லி நெடுஞ்சாலை, சாஸ்திரி நகர், புல்லா ரெட்டிபுரம், கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி, நேரு பூங்கா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

திண்டுக்கல்: சின்னக்காம்பட்டி துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, மாம்பாறை, சின்னக்காம்பட்டி, கொ.கீரனூர், குத்திலிப்பை, சாமியாடிபுதூர், ஐ.வாடிப்பட்டி, நரசிங்கபுரம், கொங்கபட்டி, ஜவ்வாதுபட்டி, அண்ணாநகர், புல்லாகவுண்டனூர், நவக்கானி, சோளியப்பகவுண்டனூர், இ.அய்யம்பாளையம், நாரப்பநாயக்கன்பட்டி, அத்தப்பன்பட்டி, எல்லப்பட்டி, இடையன்வலசு, இ.கல்லுப்பட்டி, பெருமாள்கவுண்டன்வலசு, கக்கரநாயக்கனூர், வலையபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அதே போல், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேடசந்தூர், லட்சுமணம்பட்டி, நாகம்பட்டி, தம்மணம்பட்டி, முதலியார்பட்டி, நாககோனனூர், ஸ்ரீராமபுரம், காளனூர், மரியபித்தாம்பட்டி, தட்டாரபட்டி, சேனன்கோட்டை, முருநெல்லிக்கோட்டை, சுள்ளெரும்பு, குருநாத நாயக்கனூர், நவாமரத்துப்பட்டி மற்றும் இந்த கிராமங்களை சேர்ந்த குக்கிராமங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் மின் வினியோகம் இருக்காது.

திருப்பூர்: அலகுமலை துணை மின்நிலைய உயர் மின் அழுத்த பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெருந்தொழுவு, கவுண்டம்பாளையம், நொச்சிபாளையம், அமராவதிபாளையம், ராமேகவுண்டம்பாளையம், கிருஷ்ணா நகர், பிள்ளையார் நகர், அமராவதி நகர், சரணம் அய்யப்பா நகர், ரங்கேகவுண்டம்பாளையம், கோவில் வழி, விவேகானந்தா பள்ளி ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.