கோடை காலம் தொடங்கிவிட்டது. வெயில் சுட்டெரிக்கும் இந்தநேரத்தில் வயிற்றுக்கு குளிர்ச்சியாக எதையாவது குடிக்க தோன்றும். அதற்கு ஏற்றாற்போல எங்கு திரும்பினாலும் ஜூஸ் கடைகளே அதிகம் தென்படுகின்றன. இத்தகைய கடைகளில் ஜூஸ் குடிக்கும் முன், ஜூஸ் போட கலக்கும் தண்ணீர் சுத்தமானதா? என்பதை முதலில் கவனிக்க வேண்டும்.

அசுத்தமான நீரால் வயிற்றுப்போக்கு. வாந்தி உள்ளிட்ட பிரச்னைகளும், அதனால் உடலில் நீர் இழப்பும் ஏற்படலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு ஜூஸ் வாங்கிக் கொடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டியது மிக அவசியம்.