பொதுமக்கள் whatsapp மூலமாக புகார் அளிக்கலாம் என்று மருந்து கட்டுப்பாட்டு துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு மக்கள் புகார்களை நேரடியாகவும் கடிதம் அல்லது தொலைபேசி மூலமாகவும் அழித்து வருகின்றனர்.

இந்நிலையில் இனி புகார்களை வாட்ஸ் அப் செயலி மூலம் பெறுவதற்கு ஏதுவாக 9445865400 என்ற எண் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணில் வாட்ஸ் அப் செயலி மூலமாக பொதுமக்கள் தங்களின் புகார் மற்றும் குறைகளை கூறலாம். புகார்களை பற்றிய விவரங்கள் உரிய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டவுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மருந்து கட்டுப்பாட்டு துறை அறிவித்துள்ளது.