நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் அரசு பேருந்துகளில் ஆட்கள் இல்லாமல் பார்சல்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு சுற்றறிக்கை மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்தில் பயணிப்பவர்கள் தாங்கள் கொண்டு செல்லும் பணம் மற்றும் பொருட்களுக்கான உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்றும் ஆவணங்கள் இன்று கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.