தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியான நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை இபிஎஸ் இன்று வெளியிட்டுள்ளார்.

அதில் நீட் தேர்வுக்கு பதிலாக மாற்றுத் தேர்வு முறை தேவை, உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும், குற்றவியல் வழக்கு சட்டங்களின் பெயர்கள் மாற்றத்தை கைவிட வலியுறுத்தப்படும், ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.