மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சென்னை அண்ணா அறிவாலயம் வந்தனர். முதல்வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சந்தித்தார். இதனையடுத்து திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவரும், முதல்வருமான முக ஸ்டாலின் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்துள்ளனர்.

கூட்டணியில் புதிய கட்சிகள் இணைவதால் எந்தெந்த தொகுதிகள் என்பதை பேசி முடிவெடுக்க வேண்டி உள்ளது. மார்க்சிஸ்ட் போட்டியிடும் இரு தொகுதிகளின் விவரம் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்படும் என பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கடந்த முறை கோவை, மதுரை தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது.

சற்று நேரத்திற்கு முன்னதாக திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளுக்கு திமுக தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்தது குறிப்பிடத்தக்கது.