பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 13ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. மாணவர்கள் தேர்வுகளை சிறந்த முறையில் எழுதி முடித்ததால் இன்று முதல் மாணவர்களுக்கு தொடர்விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையில் மாணவர்கள் ஜாலியாக இருந்தாலும், அடுத்தக்கட்ட படிப்புகளுக்கான வேலை திட்டத்தையும் மாணவர்கள் ஆரம்பிக்க வேண்டும்.

அதாவது அடுத்து என்ன படிக்கலாம் போன்றவற்றை ஆலோசித்து அதற்கான செயல் திட்டங்களை செயல்படுத்துங்கள். மேலும் +2 தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் 10ம் தேதி தொடங்கி, மே மாதம் ரிசல்ட் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.