மகாளய அமாவாசையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து மேல்மலையனூருக்கு வருகின்ற அக்டோபர் 14ஆம் தேதி 380 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புரட்டாசி மாத அமாவாசை என்று விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அங்காளம்மன் திருக்கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால் அவர்களின் வசதிக்காக பல்வேறு நகரங்களில் இருந்து அக்டோபர் 14ஆம் தேதி 380 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

அதன்படி சென்னையில் இருந்து 210 பேருந்துகள், தாம்பரத்திலிருந்து 40 , காஞ்சிபுரத்திலிருந்து 30, வேலூரில் 15, விழுப்புரத்தில் 20, புதுச்சேரியில் 20 மற்றும் திருவண்ணாமலையில் 20 என மொத்தம் 380 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது