மராத்தா இடஒதுக்கீடு கோரி மகாராஷ்டிராவில் சில காலமாக நடந்து வரும் போராட்டம் தற்போது தீவிரமடைந்து வருகிறது. இயக்கத்தை வழிநடத்தும் மனோஜ் ஜாரங்கேவின் உடல்நிலை மோசமடைந்ததால், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மீது போராட்டக்காரர்கள் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். மராத்தா இடஒதுக்கீடு கோரும் தொண்டர்கள் எம்எல்ஏக்களின் வீடுகள், அலுவலகங்கள், கடைகளுக்கு தீ வைத்து கொளுத்தி வருகின்றனர். இந்த பதற்றமான சூழல் காரணமாக அதிகாரிகள் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். இணைய சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.