மகாராஷ்டிராவின் பால்கார் மாவட்டத்தின் சின்சுபாடா -பாடசாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் 47 மாணவர்கள் உட்பட மொத்தம் 70 பேர் பயணம் செய்தனர். இந்த நிலையில் எதிர் திசையில் இருந்து வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது மோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 55 பேர் படுகாயம் அடைந்த நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.