மகாராஷ்டிர மாநிலத்தில்  நாக்பூரில் மனதை உலுக்கும் சம்பவம் ஒன்றுஅரங்கேறியுள்ளது. காணாமல் போன 3 சிறுமிகள் காரில் உடல் உறுப்புகள் சிதைந்து  அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். பச்போலி காவல் நிலைய பகுதியில் சனிக்கிழமை மாலை 3 சிறுமிகள் காணாமல் போயுள்ளனர்.

இதனை தொடர்ந்து பெற்றோர் காவல் நிலையத்தை அணுகி அவர்களும் தேடி வந்தனர். இறுதியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் சிறுமிகள் அங்கிருந்த காரில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கார் கதவு பூட்டியதால் மூச்சுத் திணறி சிறுமிகள் இறந்திருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர்.