ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மகா சிவராத்திரி கொண்டாட்டத்தின் போது விபத்து ஏற்பட்டது அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மகா சிவராத்திரி ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி 14 குழந்தைகள் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.