கடந்த 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தல் சமயத்தில் திமுக அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை திட்டம். இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்காதவர்களும் புதிதாக விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற அவர், சமுதாயத்தில் மகளிர் சுயமரியாதையுடன் வாழ இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்றார். தகுதியானவர்கள் இ-சேவை மையங்கள் மூலம் மேல்முறையீடு செய்யலாம் என்றும், நவ. 30-ம் தேதிக்குள் தீர்வு கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.