அதிமுகவின் வாக்கு வங்கியாக மகளிர் கருதப்படுகின்றனர். ஜெயலலிதா மறைவால், அந்த வாக்குகள் கடந்த தேர்தலில் திமுகவுக்கு சென்றதே அக்கட்சியின் வெற்றிக்கு காரணமென கூறப்படுகிறது. அந்த வாக்குகளை தக்க வைக்கவே, மகளிருக்கு இலவச பேருந்து பயணம், உரிமைத் தொகை திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியதாக நம்பப்படுகிறது. அந்தத் திட்டங்கள், மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்குகளாக மாறுமா என்பது தெரியவில்லை.