தமிழ்நாட்டில் இல்லத்தரசிகளுக்கு செப்டம்பர் 14 ஆம் தேதி 1000 ரூபாய் உரிமைதொகை வழங்கப்பட இருக்கிறது. இதில் யாரெல்லாம் வாங்க தகுதியுடையவர்கள் என்பது குறித்து முன்னதாக அரசாணை வெளியீட பட்டுள்ளது. இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஜூலை 20ஆம் தேதி முதல் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

முகாம் நடக்கும் இடம் குறித்து நியாய விலை கடைகளில் தமிழில் தகவல் பலகை அமைக்கவும், குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்- விண்ணப்பங்களை நியாய விலை கடை பணியாளர்கள் விநியோகம் செய்யவும் உத்தரவிட்டுள்ளது. மேலும், பயனாளிகள் கைவிரல் ரேகை அவசியம் வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.