தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் இந்த திட்டத்தின் கீழ் பகுதி உடைய 1.06 பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது . இந்த நிலையில் அக்டோபர் மாதத்திற்கான ஆயிரம் ரூபாய் ஒரு நாள் முன்னதாகவே வரவு வைக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி  ஒரு கோடியே 6 லட்சத்து 48 ஆயிரத்து 406 பயனாளிகளுக்கான மகளிர் உரிமைத் தொகை ஒருநாள் முன்னதாகவே வரவு வைக்கப்பட்ட நிலையில் வங்கி கணக்கு இல்லாத 87,785 பயனாளிகளுக்கு அஞ்சல் மூலமாக உரிமைத்தொகை  அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் அக்டோபர் மாதத்திற்கான கூடுதல் பயனாளிகளாக 541 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.