தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை விரிவுபடுத்தும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது தமிழ்நாட்டில் தகுதி வாய்ந்த 1.7 கோடி பெண்களை இந்த திட்டம் சென்றடைகிறது. தேர்தல் நேரத்தில் இது குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி, தேர்தல் முடிந்த பின்னர் இந்த திட்டம் அனைத்து பெண்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று உறுதி அளித்தார். அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.