மகளிருக்கு 33% இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டம் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. பல வருடங்களாக நிலுவையில் இருந்த நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் விரைவில் மசோதா தாக்கலாகும் என தகவல் வெளியாகியுள்ளது.