ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தினத்தன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அணியும் புடவைகள் மீது அனைவரது பார்வையும் எழும். இன்று அவர் நீல நிற புடவையில் பட்ஜெட் பெட்டியை பிடித்தபடி காணப்பட்டார். பழுப்பு நிறத்தில் இருக்கும் இந்த பட்டு கைத்தறி புடவை பெங்காலி கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் எம்பிராய்டரியுடன் உள்ளது.

இந்த நீல நிறமே தமிழகத்தில் ‘ராமர் ப்ளூ’ என்று அழைக்கப்படுகிறது. சமீபத்தில், அயோத்தி ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழாவின் அடையாளமாக அவர் இந்த வண்ண சேலையை அணிந்திருந்தார்.