சீரியல் நடிகை ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவரது கணவர் தினேஷ் குறித்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை. இவர்கள் பிரிந்து வாழும் சூழலில், தினேஷ் ரச்சிதாவுக்கு ஆதரவு தெரிவித்தார். இதன் காரணமாக ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்தபின் அவர்கள் மீண்டும் இணைய வாய்ப்பு உள்ளது என சொல்லப்பட்டது. எனினும் அது நடக்கவில்லை.

இதனிடையே ரச்சிதா தான் குழந்தையை தத்தெடுக்க போவதாக மறைமுகமாக கூறியிருந்தார். இதனால் அவர்கள் விவாகரத்து பெறுவது உறுதி என்றே கருதப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரச்சிதா போலீசில் தினேஷ் மீது புகாரளித்துள்ளார். அதாவது, தினேஷ் தனக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி மிரட்டுகிறார் என்று புகாரளித்திருக்கிறார்.

இது தொடர்பாக போலீஸ் தினேஷிடம் விசாரித்தபோது, ரச்சிதா உள்நோக்கத்தோடு புகாரளித்து இருக்கிறார். அவர் சட்டப்படி தன்னிடம் விவகாரத்து பெற்றுக்கொள்ளட்டும் என சொல்லிவிட்டு வந்திருக்கிறார். அதனை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் “My dear friends and well wishers. I am absolutely fine. Nothing hurts me except my goodness” என பதிவிட்டு இருக்கிறார் தினேஷ். ரச்சிதாவுக்கு பதிலடி கொடுக்கத் தான் அவர் இப்படி ஒரு பதிவை போட்டிருக்கிறார்.