இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே நவீன மயமாகிவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய கைகளிலும் செல்போன் இருக்கிறது. செல்போன் இல்லாத கைகளே பார்க்க முடியாது என்ற அளவிற்கு மாறி விட்டது. இந்நிலையில் நம் நாட்டில் ஆண்களும் பெண்களும் மொபைல் போன்களை பயன்படுத்துவது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் சில சுவாரஷ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில், ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் ஆண்கள் முன்னணியில் இருந்தாலும், அவர்கள் கேமிங் ஆப்களில் அதிக நாட்டம் கொண்டுள்ளனர். ஆனால், பெண்கள் உணவு, தகவல் தொடர்பு மற்றும் வீடியோ செயலிகளை பயன்படுத்துவது தெரியவந்தது.