ஈரோடு மாவட்டத்திலுள்ள நாமக்கல் பாளையத்தில் பாலு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இதில் பாலு அப்பகுதியில் இருக்கும் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பாலு அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்தார். நேற்று முன்தினம் பாலு குடிபோதையில் வீட்டிற்கு சென்றபோது கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது பாலு தனது மனைவியை தாக்கினார்.

இதனால் கோபமடைந்த ஈஸ்வரி அரிவாளால் தனது கணவரை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த பாலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாலுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஈஸ்வரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.