பீகார் மாநிலத்தில் அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சம்பவத்தன்று ஆசிரியர் ஒருவர் குடிபோதையில் பள்ளிக்கு வந்ததாகவும், அதனால் அவர் பள்ளிக்கு விடுமுறை என கூறி மாணவர்களை வீட்டிற்கு அனுப்பியுள்ளார். இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

இந்த நிலையில், உடனடியாக இதில் போலீஸ் தலையிட்டு சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்ததாகவும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.