நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கடந்த திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. வட மாநிலங்களில் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக ஹோலி உள்ளது. இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை பெண் ஒருவர் தன் தோழிகளுடன் ஹோட்டலில் பார்ட்டிக்கு சென்றுள்ளார். இந்த நிலையில், அங்கிருந்த ஆசாமிகள் சிலர் அப்பெண்ணுக்கு குளிர்பானத்தில் போதைப்பொருள் கலந்து கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர் அருகில் உள்ள பாலம் அருகே வீசிச் சென்றுள்ளனர். பின்னர் அப்பகுதி மக்கள் அப்பெண்ணை மீட்டு போலீசாருக்கு தகவல் அளித்து மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது தெரியவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.