தமிழகத்தில் போதை பொருள் பழக்கம் அதிகரித்து வரும் நிலையில் அரசு போதைப்பொருள் நடமாட்டத்தை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. கடந்த 10 வருடங்களில் 70% போதை பழக்க வழக்கங்கள் அதிகரித்துள்ளதாகவும், இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமானோர் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய வாலிபர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போதைப்பொருளுக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது.

இதற்காக முக்கிய பிரமுகர்கள் பலரை சந்தித்து இந்திய வாலிபர் சங்கத்தினர் கையெழுத்து வாங்குகிறார்கள். அந்த வகையில் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் வீட்டிற்கு அவர்களை அழைத்து போதைப் பொருளுக்கு எதிரான ஒரு கோடி கையெழுத்து திட்டத்தில் கையெழுத்து போட்டுள்ளார். மேலும் ஒரு கோடி கையெழுத்து திட்டத்தில் நடிகர் ரஜினி கையெழுத்து போடும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகி வரும் நிலையில் ரஜினிக்கு பலரது தரப்பிலிருந்தும் பாராட்டுகளுக்கு குவிந்து வருகிறது.