தனுஷ் இயக்கத்தில் உருவான பா.பாண்டி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விரைவில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஷ்ணு விஷால், எஸ்.ஜே.சூர்யா என பலர் நடிக்கும் இப்படத்தில் தனுஷ் சிறப்பு தோற்றத்தில் நடிப்பார் என்றும் இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் இதற்கு இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் செல்வராகவன் கருத்து தெரிவித்துள்ளார்.

தனுஷ் இயக்க இருக்கும் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நான் நடிக்க விரும்புகிறேன். அந்த கேரக்டரை என்னால் மிக சரியாக செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தனுஷ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் செல்வராகவன் நடிப்பதை கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.