ஒவ்வொரு போட்டியிலும் 40 ரன்களுக்கு குறையாமல் ரன்களை கொடுக்கிறார் என்று கிண்டல் செய்த ரசிகருக்கு தேஷ்பாண்டே பதிலடி கொடுத்துள்ளார்..

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை. இருப்பினும் தோனியின் சிறப்பான கேப்டன்சியால் சிஎஸ்கே அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ள 28 வயதான வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே ரன் கொடுக்கும் இயந்திரம் என ரசிகர் ஒருவர் விமர்சித்துள்ளார். தேஷ்பாண்டே மணிக்கு 140 கிமீ வேகத்தில் பந்து வீசுகிறார்.

ஐபிஎல் சீசனின் தொடக்கத்தில், ரன்களை கொடுத்தாலும், சில போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றினார். 15 போட்டிகளில் விளையாடியுள்ள தேஷ்பாண்டே இதுவரை 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தகுதிச் சுற்று முதல் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக பந்துவீசிய தேஷ்பாண்டே 4 ஓவர்களில் 0ஒரு விக்கெட் வீழ்த்தி 43 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதற்கு ஒரு ரசிகன், ரன் குவிக்கும் இயந்திரமான தேஷ் பாண்டே. ஒவ்வொரு போட்டியிலும் 40 ரன்களுக்கு குறையாமல் ரன்களை கொடுக்கிறார் என்று கிண்டல் செய்தார்.

இதற்கு பதிலளித்த துஷார் தேஷ்பாண்டே, தைரியம் இருந்தால் களத்தில் வீரராக வந்து விளையாடுங்கள். பிறகு என்னை விமர்சியுங்கள். ஆனால்  நான் வேண்டுமானால் உங்களுக்கு சவால் விடுகிறேன். எல்லைக் கோட்டைத் தாண்டி மைதானத்திற்குள் கூட நுழைய முடியாது என்று காட்டமாக தெரிவித்தார்.

தேஷ்பாண்டேவின் ட்வீட்டுக்கு எதிர்ப்பும் ஆதரவும் உள்ளது. கிரிக்கெட் வீரர்கள் இதுபோன்ற விமர்சனங்களுக்கு செவிசாய்க்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலடி கொடுப்பது கவனத்தை சிதறடித்துவிடும் என்றும் ஒரு சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்கள் தங்கள் கருத்தை  சொல்லத்தான் செய்வார்கள் என்றும், கிரிக்கெட் வீரர்களாக இருந்தால் மட்டும் தான் விமர்சனம் செய்ய முடியுமா என்ன? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.