தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் ராஜமவுலி பாகுபலி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் மிகவும் பிரபலமானார். பாகுபலி படத்தின் முதல் பாகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பாகுபலி 2 ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தை தொடர்ந்து அவர் இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படமும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. இவர் தற்போது நடிகர் மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இயக்குனர் ராஜமவுலி ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவரிடம் பாகுபலி 3 வெளிவருமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் கண்டிப்பாக பாகுபலி 3 வெளிவரும் என்றும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடிகர் பிரபாஸிடம் நடந்து வருகிறது என்றும் கூறினார். மேலும் இதனால் பாகுபலி 3 வெளியாவது உறுதியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது