கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் காந்தி சந்திப்பில் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மது போதையில் வாகனம் ஓட்டி வந்த 2 நபர்களை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர் நவீன கருவி மூலம் பரிசோதனை செய்த போது 2 பேரும் மது குடித்தது உறுதியானது. அவர்கள் மீது போலீசார் வழக்குபதிந்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து 2 சிறுவர்கள் ஓட்டி வந்த வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்து தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக மொத்தம் 114 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.