தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். அண்மையில் இவர் இசையமைத்து பாடிய இனி மேல் என்ற இசை ஆல்பம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் மும்பையில் தங்கியுள்ள நிலையில் பாலிவுட் படத்தில் கமிட் ஆகி படபிடிப்பில் பங்கேற்ற வருகிறார்.

இந்த நிலையில் படபிடிப்பில் பங்கேற்பதற்காக ஸ்ருதிஹாசன் காரில் சென்ற போது போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டார். அதனால் காரை ஒதுக்கி நிறுத்தி விட்டு ஆட்டோ பிடித்து அதில் பயணம் செய்தார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.