சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் ஜனவரி 4-ம் தேதி திமுக எம் பி யும் பொன்முடியின் மகனுமான கௌதம் சிகாமணி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் நவம்பர் 24ஆம் தேதி அவருக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குற்றச்சாட்டு பதிவுக்கு இன்று ஆஜராகாததால் ஜனவரி 4-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று சென்னை அமர்வு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீது சொத்து குவிப்பு வழக்கில் உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நிலையில் அடுத்ததாக அவரது மகன் மீது வழக்குப் பாய உள்ளது.