ஓம் ராவத் டைரக்டில் பிரபாஸ் மற்றும் கீர்த்தி சனோன் நடித்து சென்ற 16ம் தேதி வெளியான படம் ஆதிபுருஷ். இந்த படம் புராண கதைகளில் ஒன்றாகிய ராமாயணத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. முதல் நாளிலிருந்து இப்படத்திற்கு மோசமான விமர்சனங்கள் வந்த நிலையில், வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்த நிலையில் ஆதிபுருஷ் திரைப்படம் ரிலீஸ் ஆகி 3 நாட்கள் கடந்துள்ள நிலையில், இதுவரையிலும் ரூ. 300 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்திருக்கிறது. நடப்பு ஆண்டு ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன்-2 திரைப்படமே மொத்தமாக ரூ.345 கோடி வசூல் செய்தது. இனி  வரக்கூடிய நாட்களில் சுலபமாக பொன்னியின் செல்வன்-2 படத்தின் வசூல் சாதனையை ஆதிபுருஷ் முறியடித்துவிடும் என தகவல் தெரிவிக்கின்றனர்.