பொதுத்துறை நிறுவனங்களின் செயல் திறனை மேம்படுத்துவதற்காக கேரள மாநில முதல்வர் தன்னாட்சி வாரியத்தை அறிமுகம் செய்துள்ளார். இதில் காலி பணியிடங்களை திறமையான விண்ணப்பத்தாளர்களைக் கொண்டு வெளிப்படை தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்களுக்கு தொழில் முறை மூலமாக சிறந்த வருவாய் மற்றும் லாபத்தை ஈட்டி தர இந்த வாரியம் நிறுவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் தொழில் மற்றும் வணிகத் துறையின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் பணியாளர்களை இந்த வாரியத்தின் அடிப்படையில் நிரப்பி கொள்ள முடியும். மேலும் பிரதுரைகளின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்களும் ஆட்சேர்ப்பிற்காக இந்த சேவையை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.