பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள நியாய விலைக்கடையில் இருந்து முதலமைச்சர்  தொடங்கி வைத்தார். தமிழகத்தில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 ரொக்கப்பணமும் வழங்கப்படுகிறது.

சென்னையில் இன்று திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம், திருச்சி, கோவை, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தஞ்சை, அரியலூர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தந்த பகுதி நியாய விலைக்கடைகளில் தொடங்கி வைக்கின்றனர்.