தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அனைத்து விவரங்களையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த முறை ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, இலவச வேஷ்டி சேலை, முழு கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் வருகின்ற ஜனவரி 3ஆம் தேதி முதல் ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக வீடு வீடாக வழங்கப்படும். அதன் பிறகு ஜனவரி ஒன்பதாம் தேதி முதல் பொங்கல் பரிசு அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படும்.

இதனைத் தொடர்ந்து ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதாவது பொங்கல் பரிசு தொகுப்பிற்கு என்று அரசு வழங்கியுள்ள தரமான பச்சரிசி மற்றும் சர்க்கரையை மட்டுமே மக்களுக்கு வழங்க வேண்டும். அதில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் அதற்கு கடை உரிமையாளர்கள் தான் முழு பொறுப்பு. அதேசமயம் கரும்பு கொடுக்கும் போது அதன் தோகையை வெட்டாமல் தான் வழங்க வேண்டும். பொதுமக்கள் எந்த வித புகார் தெரிவிக்காத வகையில் கரும்பு வினியோகம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.