பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின்  அறிவித்துள்ளார். ஏற்கெனவே பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்தத் தொகை ரேஷன் கடைகளில் ரொக்கமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1,000 ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படும்.

பொங்கல் பரிசு தொகுப்புடன் இலவச வேட்டி, சேலைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கலுக்கு முன்னதாக ரூ.1,000 வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.   பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன்களும் தயார் செய்யப்பட்டுள்ளன.