தோனி பேட்டிங் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தபோது தோனியின் பேட் அருகில் அமர்ந்திருந்த தீபக் சாஹரை பயமுறுத்த, அவர் ஓடி போன நகைச்சுவை வீடியோ வைரலாகி வருகிறது..

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது தோனி செய்த செயல் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 226 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே அணியில் தோனி தற்போது கடைசி கட்டத்தில் பேட்டிங் செய்ய வருகிறார். காயம் காரணமாக தோனி பேட்டிங்கைத் தவிர்த்து வருகிறார்.

லக்னோவுக்கு எதிராக தோனி 3 பந்துகளையும், பெங்களூருக்கு எதிராக ஒரு பந்தையும் மட்டுமே எதிர்கொண்டார். தோனி எப்பொழுதும் களத்திற்கு வருவதற்கு முன்பு சூடாக இருப்பார். அதாவது முதல் பந்திலேயே சிக்சர் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் தோனி களம் இறங்குகிறார். அதற்கேற்ப தோனி எப்போதும் தன்னை தயார்படுத்திக் கொள்கிறார்.

அதன்படி பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் அப்படித்தான், வீரர்கள் அமர்ந்திருந்த இடத்தில் தோனி பேட்டிங் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது தோனியின் பேட் அருகில் அமர்ந்திருந்த தீபக் சாஹரை பயமுறுத்தியது. தீபக் சாஹரின் முகத்திற்கு அருகே பேட் வந்தது.

ஆனால், இதை தோனி உணரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தீபக் சாஹர், ஆள விடுங்கடா சாமி என்பது போல  அங்கிருந்து வெளியேறினார். தீபக் சாஹர் ஏற்கனவே அடிக்கடி காயங்களுக்கு உள்ளானதால் போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. இப்போது தோனியின் பேட் சாஹர் முகத்தில்  அடித்தால், அவருக்கு என்ன நடக்கும்?

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சேட்டை பிடித்தவர் தோனி என்று பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். தோனி எதற்கும் பயிற்சி செய்யும் போது சிஎஸ்கே வீரர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் சிலர் நகைச்சுவையாக கூறி வருகின்றனர்..

https://twitter.com/45_cult/status/1648379184342011904

https://twitter.com/Shrey__123/status/1648296481663881217