குமரி மாவட்டம் கிளியூர் பகுதியை சேர்ந்த 11 மாத குழந்தை விழுங்கிய பட்டன் பேட்டரியை அரசு மருத்துவர்கள் குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் பத்திரமாக மீட்டனர். குமரி மாவட்டம் கிளியூர் பகுதியை சேர்ந்த 11 மாத குழந்தை ஒன்று வீட்டில் இருந்த பட்டன் பேட்டரியை விளங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு குழந்தைக்கு மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தனர். இதனைத் தொடர்ந்து பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு குழந்தையின் வயிற்றிலிருந்து பேட்டரி அகற்றப்பட்டது. தற்போது குழந்தை நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.