அமெரிக்காவின் மிச்சிகன் ஹெல்த் யுனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வு ஒன்றில், ஹெட்போன்களை அதிகமாக பயன்படுத்துவதால் குழந்தைகளின் காதுகளில் கேட்கும் மண்டலங்கள் பாதிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. காது கேளாமை மட்டுமல்லாமல் காதில் எப்போதும் தெரியாத சத்தம் கேட்கும், டின்னிடஸ் போன்ற கோளாறுகள் வரும் என கவலை தெரிவித்துள்ளனர். குழந்தைகளிடமிருந்து ஹெட் ஃபோன்களை முற்றிலுமாக அகற்றுவது நல்லது என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.