கேரள மாநிலம் திருச்சூர் திருவில்வாமலையில் நடந்த சோகமான சம்பவத்தில் பட்டி பரம்பு என்ற பகுதியை சேர்ந்த ஆதித்யஸ்ரீ என்ற எட்டு வயது சிறுமி கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது மொபைல் போன் வெடித்து சிதறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று நடந்த சம்பவம் இரவு 10.30 மணிக்கு நடந்துள்ளது. திரு வில்வ மலையில் உள்ள கிறிஸ்ட் நியூ லைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார் ஆதித்யஸ்ரீ.

இதனைத் தொடர்ந்து நேற்று இரவு கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென போன் வெடித்து சிதறியதில் சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் உரிய நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இன்று தடவியல் ஆய்வு நடைபெற உள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.