மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாபி தாஸ். 18 வயதான இவர் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 10ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற இவர் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து அந்த மாணவனின் நண்பர்களிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனையடுத்து அவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

அப்போது திடுக்கிடும் தகவலாக ஆன்லைன் கேமான ஃப்ரீ ஃபயர் பாஸ்வேர்டை பாபி தாஸ் தரமறுத்ததால் அவரை கொலைசெய்து உடலை தீயிட்டு எரித்ததாக கூறியுள்ளனர். இதனையடுத்து 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.