சென்னையில் கொசுவை விரட்டும் ஆல் அவுட் மருந்தை  குடித்து 2 வயது குழந்தை  பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, மணலி அடுத்த மாத்தூரில் வீட்டில் கொசுக்களை விரட்ட பயன்படுத்தும் ஆல் அவுட்-ஐ எடுத்து குடித்த குழந்தை லட்சுமி (2) உயிரிழந்துள்ளார். அதாவது சமபவத்தன்று குழந்தை ஸ்விட்ச் போர்டில் இருந்த கொசு விரட்டியை  எடுத்து உறிஞ்சியுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த  தாய் நந்தினி, உடனே அதை பிடுங்கி எறிந்துவிட்டு உடனே மருத்துவமனைக்கு அழைத்த சென்றுள்ளார். ஆனாலும், சிகிச்சை பலனின்றி லட்சுமி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.