தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே மின் கட்டணம் குறைவாக இருக்கும் வீடுகளிலும் அதிகமாக மின் கட்டணம் வருவதாக புகார் எழுந்து வந்தது. இதனை அடுத்து வீடுகளில் துல்லியமாக கணக்கீடு செய்யும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டமானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தில் எந்த ஒரு குளறுபடிகளும் இல்லாமல் தானாகவே ரீடிங் எடுத்து கட்டண விவரங்கள் துல்லியமாக எஸ்எம்எஸ் மூலமாக நுகர்வோரின் செல்போனுக்கு அனுப்பும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் பொருத்தும் பணி நிறைவடையும் என்று மின்சார வாரிய ஊழியர்கள் தெரிவித்துள்ளார்கள்.