ரோமில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கொலோசியம் 2000 வருடங்கள் பழமை வாய்ந்தது. இதனை அந்நாட்டு அரசு பாதுகாத்து வரும் நிலையில் சிறுமி ஒருவர் ரோமன் கொலாசியம் சுவற்றில் தனது பெயரை செதுக்கியுள்ளார்.

இது தொடர்பான காணொளியை இத்தாலியை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டியான டேவிட் என்பவர் பகிர்ந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து  சிறுமியும் அவரது பெற்றோரும் காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இந்திய மதிப்பில் 13.8 லட்சம் அபராதமாக வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.